யாழில் சிக்கிய வாள்வெட்டு குழுவின் திடுக்கிடும் பல ஆதரங்கள் !

யாழ். மானிப்பாய் உடுவில் பகுதிகளில் இன்றையதினம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் ஆவா குழுவை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் எண்மர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் 3 வாள்கள், ஒரு சுழியோடிக் கண்ணாடி மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டன. அவர்கள் வாள்வெட்டுக்குச் செல்லும் போது சுழியோடி கண்ணாடியை அணிந்தவாறு செல்வது அவர்களின் கைபேசியில் மீட்கப்பட்ட ஒளிப்படங்களின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் வாள்களில் தமது பெயர்களைப் பொறித்து வைத்திருப்பதும் அந்த ஒளிப்படங்களில் காண முடிகிறது என்று பொலிஸார் கூறினர். … Continue reading யாழில் சிக்கிய வாள்வெட்டு குழுவின் திடுக்கிடும் பல ஆதரங்கள் !